Tamilnadu
சாலையில் சென்றபோது தீப்பிடித்து எரிந்த கார்: உயிர் தப்பிய குடும்பம்: இரவில் நடந்த பயங்கரம்!
சென்னையை அடுத்த அய்யப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் தனியார் நிதி நிறுவன வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி திவ்யா.
இந்நிலையில் தம்பதிகள் மற்றும் குழந்தைகள், பெற்றோர் ஆகியோர் நேற்று இரவு தேனாம்பேட்டையில் நடந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றனர். காரை திவ்யா ஓட்டிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, கிண்டி நோக்கிச் செல்லும் கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது காரில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதை கவனித்த திவ்யா உடனே காரை நிறுத்தியுள்ளார்.
பிறகு அனைவரும் காரில் இருந்து வெளியே வந்த சில நிமிடத்திலேயே கார் பற்றி எரிந்துள்ளது. இதைப்பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். சில நிமிடம் தாமதித்திருந்தாலும் அனைவரும் தீயில் சிக்கியிருப்பார்கள்.
இது பற்றி தகவல் அறிந்தது அங்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காரில் எரிந்திருந்த தீயை அனைத்தனர். இதில் காரின் முன் பகுதி முழுவதும் எரிந்து விட்டது. இது குறித்து பரங்கிமலை போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கத்திப்பாரா பகுதியில் கிண்டி நோக்கிச் செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Also Read
-
“பாவம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றலாம்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களை..” -பாஜகவை வெளுத்து வாங்கிய தயாநிதி MP!
-
உலக மனித உரிமைகள் நாள் : சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் : மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. எப்போது தொடக்கம்? -விவரம்!
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!