Tamilnadu
அரசுப் பணிக்குத் தயாராகும் இளைஞர்கள் கவனத்திற்கு.. TNPSC வெளியிட்டுள்ள முக்கிய தகவல் என்ன தெரியுமா?
தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் துறைகளுக்கு ஏற்பவும், கல்வித் தகுதிக்கு ஏற்பவும் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 என நான்கு பகுதியாக ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்வுக்கான அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதில் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் காலிப்பணியிடங்கள் எவ்வளவு என்ற முழு விவரத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த குரூப் 2, 2ஏ காலி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வுகள் முடிந்தது. இதற்கான முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி 23ம் தேதியில் இருந்து டிசம்பர் 23ம் தேதி வரை 11 தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொறியியல் துணை சேவைகள் பிரிவில் காலியாக இருக்கும் 828 பணியிடங்களுக்கும், ஊரக மேம்பாடு, சாலை ஆய்வாளர் பணியில் காலியாக உள்ள 762 பணியிடங்களுக்கும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தேர்வு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு மே மாதம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், குரூப் 4 பணிகளுக்கு அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வு நடத்தப்படும் என்றும் முடிவுகள் மே மாதம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் டி.என்.பி.எஸ்.சி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Also Read
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!