Tamilnadu
“ஜெயலலிதா சிலையை அனுமதியின்றி நிறுவ முயன்ற OPS அணி” : சிலையை வாகனத்துடன் பறிமுதல் செய்த போலிஸ் !
புதுக்கோட்டையில் நெல்லுமண்டி தெருவில் அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் புதிய அதிமுக மாவட்ட அலுவலகம் திறப்பு விழாவிற்கு முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் வருகை தந்தனர்.
இந்நிலையில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் குறித்த அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் இதற்கு முன்னதாக சிறிய ரக சரக்கு வாகனத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை எடுத்து வந்து எம்ஜிஆர் சிலை அருகே அனுமதி இன்றி வைத்தியலிங்க முன்னிலையில் ஜெயலலிதா சிலையை நிறுவ போவதாக வந்த தகவலை அடுத்து காவல்துறையினர் அந்த சிலையை வாகனத்துடன் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!