Tamilnadu
“ஜெயலலிதா சிலையை அனுமதியின்றி நிறுவ முயன்ற OPS அணி” : சிலையை வாகனத்துடன் பறிமுதல் செய்த போலிஸ் !
புதுக்கோட்டையில் நெல்லுமண்டி தெருவில் அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் புதிய அதிமுக மாவட்ட அலுவலகம் திறப்பு விழாவிற்கு முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் வருகை தந்தனர்.
இந்நிலையில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் குறித்த அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் இதற்கு முன்னதாக சிறிய ரக சரக்கு வாகனத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை எடுத்து வந்து எம்ஜிஆர் சிலை அருகே அனுமதி இன்றி வைத்தியலிங்க முன்னிலையில் ஜெயலலிதா சிலையை நிறுவ போவதாக வந்த தகவலை அடுத்து காவல்துறையினர் அந்த சிலையை வாகனத்துடன் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
“இருளகற்றும் ஒளி சூரியனிடம்தான் உண்டு!” : திராவிட முன்னேற்றக் கழகம் சூளுரை!
-
“மின்வெட்டு.. ரீல்ஸ் போடாமல்.. போர்க்கால நடவடிக்கை எடுங்கள்” : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்!
-
“தமிழ்நாட்டை உலுக்கிய சேலம் பாலியல் வன்கொடுமை சம்பவம்” - சிபிசிஐடி விசாரிக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்!
-
“கழகத் தலைவரின் அன்பில்.. தாயின் பரிவையும், தலைவனின் தன்னம்பிக்கையும் பார்க்கிறோம்” : தங்கம் தென்னரசு!
-
“அதிமுக. MLAக்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் விஜய்; பாஜகவின் ஜெராக்ஸ்” : தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கு!