Tamilnadu
“ஜெயலலிதா சிலையை அனுமதியின்றி நிறுவ முயன்ற OPS அணி” : சிலையை வாகனத்துடன் பறிமுதல் செய்த போலிஸ் !
புதுக்கோட்டையில் நெல்லுமண்டி தெருவில் அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் புதிய அதிமுக மாவட்ட அலுவலகம் திறப்பு விழாவிற்கு முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் வருகை தந்தனர்.
இந்நிலையில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் குறித்த அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் இதற்கு முன்னதாக சிறிய ரக சரக்கு வாகனத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை எடுத்து வந்து எம்ஜிஆர் சிலை அருகே அனுமதி இன்றி வைத்தியலிங்க முன்னிலையில் ஜெயலலிதா சிலையை நிறுவ போவதாக வந்த தகவலை அடுத்து காவல்துறையினர் அந்த சிலையை வாகனத்துடன் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் Fail : வெளிவந்த பாஜக ஆளும் ம.பி அரசுப் பள்ளியின் அவலம் !
-
பிரசார பாடலுக்கு தடை : ஆம் ஆத்மியை குறிவைக்கும் தேர்தல் ஆணையம் ? - குவியும் கண்டனம் !
-
"அமேதியில் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன்" - வயநாடு தொகுதி CPI வேட்பாளர் ஆனி ராஜா பேட்டி !
-
“சிறையில் அடைத்ததற்கு பதிலடி கொடுக்க வாக்களிப்போம்” - ஆம் ஆத்மியின் பிரசார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை!
-
குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 149 கிலோ போதைப்பொருள் : சீல் வைக்கப்பட்ட தயாரிப்பு ஆலை !