Tamilnadu
"மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஒரு ரூபாய் கூட விடுவிக்கவில்லை" -ஒன்றிய அரசின் பதிலால் அதிர்ச்சி !
இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அங்கு பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. அதைத் தொடர்ந்து அங்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள பிலாஸ்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார்.
ஆனால், பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையோடு சேர்ந்து அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது வரை சுற்றுசுவரோடு நிற்கிறது. அதோடு சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாடு வந்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மதுரை எய்ம்ஸ்ஸில் 95% பணிகள் முடிவடைந்தது என்று கூறியது தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை தமிழ்நாடு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து ஆர்டிஐயில் (தகவல் அறியும் உரிமைச் சட்டம்) சமூக ஆர்வலர் பாண்டியராஜா கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்து ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக அதிகாரிகள், "மதுரை எய்ம்ஸ் திட்ட மொத்த மதிப்பீடான ரூ.1977.8 கோடியில், 82 சதவீதமான ரூ.1627.7 கோடியை ஜப்பானைச் சேர்ந்த ஜைகா நிறுவனம் வழங்கும். 20 சதவீத தொகையான ரூ.350.1 கோடியை ஒன்றிய அரசு பட்ஜெட் ஒதுக்கீட்டில் வழங்கும். அக்டோபர் 2026ல் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடியும். கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்பது சார்ந்த தகவல்கள் இல்லை" எனக் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் தொடர்பாக மீண்டும் ஆர்டிஐயில் சமூக ஆர்வலர் பாண்டியராஜா கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஜப்பானைச் சேர்ந்த ஜிக்கா நிறுவனம் இதுவரை ஒரு ரூபாயைக் கூட விடுவிக்கவில்லை என்று ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த பதில் தமிழ்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!