Tamilnadu
குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க டிராக் KD செயலி அறிமுகம்.. அசத்தும் தமிழ்நாடு காவல்துறை!
தமிழ்நாட்டில் குற்றங்களைத் தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வளர்ந்துள்ள தொழில் நுட்பங்களுக்கு ஏற்பவும் போலிஸார் தங்களைத் தகவமைத்துக் கொண்டு குற்றவாளிகளைப் பிடிக்க நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள குற்றவாளிகளின் நடவடிக்கைகள் மீது மாதந்தோறும் ஆய்வு நடத்தி நேரடி கண்காணிப்பு செய்யும் விதமாக அவர்களின் விவரங்களை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் காவல்துறை மூலம் டிராக் KD என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியைச் சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் தாமரைக் கண்ணன் மேற்பார்வையில், சென்னை காவல்துறை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையிலான காவல் குழுவினர் உருவாக்கியுள்ளனர். இந்த டிராக் KD செயலியை இன்று டி.ஜி.பி சைலேந்திர பாபு அறிமுகப்படுத்தியுள்ளார்.
இது குறித்து தமிழகக் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,"டிராக் KD செயலி மூலம் குற்றவாளிகள் மீதான குற்றப்பத்திரிக்கை விபரங்கள், ரவுடிகளின் எண்ணிக்கை, நன்னடத்தை பிரிவுகளின் கீழ் எத்தனை பேர் பிணைக்கப்பட்டுள்ளனர், பிணைப் பத்திரங்களின் காலாவதி தொடர்பான எச்சரிக்கைகள், நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்கு விசாரணை, குற்றத்தின் வகைகள் போன்றவற்றின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை வகைப்படுத்தி வைக்க முடியும் எனவும், அதன் காரணமாகக் காவல் அதிகாரிகளால் குற்றவாளிகளின் பல்வேறு விபரங்களை விரல் நுணியில் வைத்திருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த செயலியில் 39 மாவட்டங்கள் மற்றும் 9 ஆணையரகங்களில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் சரித்திர பதிவேடுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும், ரவுடிகளை கண்காணிப்பதற்கும், பழிவாங்கும் வகையில் கொலைகளில் ஈடுபடும் குற்றவாளிகளின் சமூக விரோத செயல்களைத் தடுப்பதற்கும் இது உதவும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!