Tamilnadu
குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க டிராக் KD செயலி அறிமுகம்.. அசத்தும் தமிழ்நாடு காவல்துறை!
தமிழ்நாட்டில் குற்றங்களைத் தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வளர்ந்துள்ள தொழில் நுட்பங்களுக்கு ஏற்பவும் போலிஸார் தங்களைத் தகவமைத்துக் கொண்டு குற்றவாளிகளைப் பிடிக்க நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள குற்றவாளிகளின் நடவடிக்கைகள் மீது மாதந்தோறும் ஆய்வு நடத்தி நேரடி கண்காணிப்பு செய்யும் விதமாக அவர்களின் விவரங்களை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் காவல்துறை மூலம் டிராக் KD என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியைச் சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் தாமரைக் கண்ணன் மேற்பார்வையில், சென்னை காவல்துறை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையிலான காவல் குழுவினர் உருவாக்கியுள்ளனர். இந்த டிராக் KD செயலியை இன்று டி.ஜி.பி சைலேந்திர பாபு அறிமுகப்படுத்தியுள்ளார்.
இது குறித்து தமிழகக் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,"டிராக் KD செயலி மூலம் குற்றவாளிகள் மீதான குற்றப்பத்திரிக்கை விபரங்கள், ரவுடிகளின் எண்ணிக்கை, நன்னடத்தை பிரிவுகளின் கீழ் எத்தனை பேர் பிணைக்கப்பட்டுள்ளனர், பிணைப் பத்திரங்களின் காலாவதி தொடர்பான எச்சரிக்கைகள், நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்கு விசாரணை, குற்றத்தின் வகைகள் போன்றவற்றின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை வகைப்படுத்தி வைக்க முடியும் எனவும், அதன் காரணமாகக் காவல் அதிகாரிகளால் குற்றவாளிகளின் பல்வேறு விபரங்களை விரல் நுணியில் வைத்திருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த செயலியில் 39 மாவட்டங்கள் மற்றும் 9 ஆணையரகங்களில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் சரித்திர பதிவேடுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும், ரவுடிகளை கண்காணிப்பதற்கும், பழிவாங்கும் வகையில் கொலைகளில் ஈடுபடும் குற்றவாளிகளின் சமூக விரோத செயல்களைத் தடுப்பதற்கும் இது உதவும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!
-
தமிழ்த்தாயின் தலைமகன் : பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் : காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் MRK உத்தரவு!
-
பெண்ணையாறு - ஒன்றிய அரசு நடுவர் மன்றத்தை உடனே அமைக்க வேண்டும் : அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்!