Tamilnadu
சர்ச்சை கருத்து.. மீண்டும் கிஷோர் கே சாமி கைது.. புதுச்சேரியில் சுற்றிவளைத்த போலிஸ்!
தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போதும் கூட சாலைகளில் வெள்ளம் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பொதுமக்கள் பலரும் நன்றி தெரிவித்துப் பாராட்டி இருந்தனர்.
ஆனால், பா.ஜ.க ஆதரவாளரான கிஷோர் கே சாமி முதலமைச்சரின் பணிகளை விமர்சிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இது குறித்து சென்னை மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகும்படி கிஷோர் கே சாமிக்குச் சம்மன் அனுப்பியுள்ளது.
ஆனால் அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகாத கிஷோர் கே சாமிக்கு முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், கிஷோர் கே சாமியின் முன்ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் அவதூறு பரப்பும் வகையில் முகநூலில் பதிவிட்ட வழக்கு தொடர்பாக இதுவரையிலும் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலிஸார் ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பியும் ஆஜராகாமலிருந்த கிஷோர் கே சாமியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் புதுச்சேரியில் அதிகாலையில் கைது செய்தனர்.
மேலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்யப்பட்ட கிஷோர் கே சாமியைச் சென்னை கொண்டு வந்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி சமூக ஊடகங்களில் இதுவரை தவறாகக் கருத்துக்களைப் பதிவிட்டதாக 17 வழக்குகள் கிஷோர் கே சாமி மீது நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!