Tamilnadu
“மக்களின் தேவையை அறிந்து திட்டங்களை செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: பேரா.ஜெயரஞ்சன் பாராட்டு!
தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக திராவிட பயிற்சி பாசறை கூட்டம் நடத்த வேண்டும் என தி.மு.க இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணியினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன் ஒருபகுதியாக, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில், இளைஞர் அணி திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளைஞர் அணியினரும் இறையூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் திருண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பில் கொளத்தூர் மணி பேசுகையில், “கி.பி 19ம் மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் சுதந்திரம் அடைவதற்கு முன்னரே பிராமினர்கள் ஆதிகத்தில் இருந்த மக்கள் சாதாரண மக்களுக்கு கல்வி மற்றும் சம உரிமைக்காக போராடிய இயக்கம் திராவிட இயக்கம்.
அடித்தட்டு மக்களுக்கான அனைத்து உரிமைகளும் கிடைக்கப் போராடிய இயக்கம் திராவிட இயக்கம்” என பேசினார். இதரைத் தொடர்ந்து மாநில சுயாட்சி என்ற தலைப்பில் மாநில திட்ட துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் பேசுகையில், “இந்தியாவில் பழமொழிகள் பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களை மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தங்களுக்கென சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்கள் என இரண்டாகப் பிரித்து மாநிலங்களுக்குள் சட்டமன்றங்களை உருவாக்கியும், இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தொகுதிகளாக பிரிக்கப்பட்டது.
தனக்கான தேவைகளை உரிமைகளையும் பிரதிநிதிகள் மூலம் அரசிடம் இருந்து பெற்று தருவது மாநில சுயாட்சி ஆகும். தமிழகத்தில் அடித்தட்டு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் ஒவ்வொன்றாக அறிந்து திட்டங்களை செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!