Tamilnadu

மனைவி இறந்த துயரத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு.. ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த துயர சம்பவம்!

சென்னை அயனாவரம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் தம்புசாமி. இவருக்கு 27 வருடங்களுக்கு முன்பு பவானி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த இவர்களுக்கு யுவஸ்ரீ என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் நேற்று பவானி மேட்டு தெருவில், பிறந்தநாள் நிகழ்ச்சிக்குத் தனது உறவினருடன் சென்றுள்ளார். அங்குக் கொடுக்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட முடித்த பிறகு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரக்கு மூச்சு விடுவதில் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே பவானியை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அவரது உறவினர் அழைத்துச் சென்ற போது, வரும் வழியிலேயே பவானி இறந்துவிட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து பவானியின் கணவர் தம்புசாமி, அவரது மகள் யுவஸ்ரீ ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து இறந்த பவானியின் உடலைப் பார்த்துள்ளனர். பின்னர் பல மணி நேரமாக தம்புசாமி காணாமல் போனதால், அவரது மகள் யுவஸ்ரீ செல்போனில் தொடர்பு கொண்ட போதும் போனை எடுக்கவில்லை.

இதையடுத்து பவானியின் உடலை அவரது உறவினர் உதவியுடன் ஆட்டோ மூலமாக வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். அப்போது வீட்டின் சமையல் அறையில் தம்புசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுபற்றி தகவலறிந்து அங்கு வந்த போலிஸார் தம்புசாமியின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி இறந்த சோகத்தில் கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: 108 ஆம்புலன்ஸில் பழங்குடிப் பெண்ணுக்கு பிறந்த அழகிய பெண் குழந்தை.. கொட்டும் மழையில் நெகிழ்ச்சி !