Tamilnadu
புதைக்கப்பட்டு திடீரென வெளிவந்த சடலம்.. பதறிய பொதுமக்கள்.. இறுதியில் மீண்டும் புதைப்பு.. நடந்தது என்ன?
ஈரோடு மாவட்டம் பாசூர் அருகேயுள்ள செங்கோடம் பாளையத்தைச் சேர்ந்தவர் துரைசாமி, விவசாயியான இவர் கடந்த மாதம் 25ம் தேதி உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் அவரது உடலை ஆற்றின் ஓரத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், பாசூர் அருகே காவிரி ஆற்று தடுப்பணை அருகே ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்துள்ளது. அதனை அருகில் சென்றுபார்த்தபோது அதன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து காவல்நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த சடலம் கடந்த மாதம் உயிரிழந்துள்ள விவசாயி துரைசாமி என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரது சடலத்தை போலிஸார் அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதனால் அவரது சடலம் இரண்டாவது முறையாக உறவினர்களால் அடக்கம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக கூறிய போலிஸார், கடந்த சில தினங்களாக காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மயானத்தில் தண்ணீர் புகுந்து அங்கிருந்த மண் அரிக்கப்பட்டது என்றும் இதனால் புதைக்கப்பட்டிருந்த துரைசாமியின் சடலம் வெளியே வந்தது என்றும் கூறியுள்ளனர். மேலும், முதலில் அது வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட சடலம் என்று நினைத்த நிலையில், விசாரணையில் இந்த தகவல் வெளிவந்ததாகவும் கூறினர்.
Also Read
-
பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் முதல் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வரை... துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!
-
“2026-இல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
“கீழடி,பொருநைக்கு சென்று பார்க்கச் சொல்லுங்கள்” : தமிழிசை சௌந்தரராஜனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
மற்றொரு நிர்பயா : பா.ஜ.க ஆளும் அரியானாவில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - உடலில் 12 தையல்!
-
“விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!