Tamilnadu
பேச மறுத்ததால் ஆத்திரம்.. காதலி வீட்டு முன்பே காதலன் எடுத்த சோக முடிவு: அதிர்ச்சியடைந்த உறவினர்கள்!
விருதுநகர் மாவட்டம் டி. காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவில்பிச்சை. இவரது மகன் தேவகுமார். இவர் அதே பகுதியில் உள்ள பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் துபாயில் வேலை பார்த்து வரும் தேவகுமாருக்கு அவரது பெற்றோர்கள் திருமணத்திற்குப் பெண் தேடி வந்துள்ளனர். இது பற்றி அறிந்த அவர் தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், அவரைதான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு துபாயிலிருந்து சொந்த ஊருக்கு தேவகுமார் வந்துள்ளார். அப்போது காதலியைச் சந்தித்து திருமணம் செய்து பேசியுள்ளார். இதற்கு அந்த பெண் அவரின் காதலை ஏற்க மறுத்து பேசுவதை நிறுத்திக் கொள்ளும் படி கூறியுள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த தேவகுமார் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த வியாழக்கிழமை காதலி வீட்டின் முன்பு சென்ற தேவகுமார் தான் எடுத்துவந்த மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார்.
பின்னர் அப்பகுதியினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தேவகுமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!