Tamilnadu

’ஏய் கம்முனு இருயா’.. செய்தியாளர்கள் முன் கத்திய எடப்பாடி பழனிசாமி!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் அவை நடவடிக்கையில் மறைந்த உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று மீண்டும் 2வது நாள் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. அப்போது கேள்வி நேரத்தில் அமைச்சர் துரைமுருகனைப் பேச முயன்றபோது, அ.தி.மு.கவினர் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக அவையை நடத்த விடாமல் தகராறு செய்தனர்.

அப்போது சபாநாயகர் அப்பாவு, 'கலங்கம் பண்ணும் நோக்கத்திலேயே இன்று நீங்கள் அவைக்கு வந்துள்ளீர்கள். இன்றைய அவையில் அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்துப் பேசினால் முந்தைய அ.தி.மு.க ஆட்சியின் அட்டூழியம் தெரிந்துவிடும் என்பதால் திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கிறீர்கள் என கூறி அ.தி.மு.க-வினரை வெளியேற்ற' உத்தரவிட்டார். மேலும் ஒருநாள் அவை நடவடிக்கையில் கலந்து கொள்வதற்கும் தடை விதித்தார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் இன்று சென்னை வள்ளூவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென 'ஏய் கம்முனு இருயா' என கையை நீட்டி பயங்கர ஆவேசமாக கத்தினார்.

எடப்பாடி பழனிசாமியின் திடீர் நடவடிக்கையைக் கண்டு செய்தியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அனுமதியின் போராட்டத்தில் ஈடுபட்டதால் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க-வினரை போலிஸார் கைது செய்தனர்.

Also Read: ’கலகம் செய்ய விடமாட்டேன்’.. அவையில் திட்டமிட்டு அமளி செய்த அ.தி.மு.க-வினரை எச்சரித்த சபாநாயகர்!