Tamilnadu
சொந்த ஊருக்குச் செல்லும்போது நடந்த துயரம்.. மாரடைப்பு ஏற்பட்டு பேருந்திலேயே உயிர்விட்ட பயணி!
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சொந்த ஊருக்குச் செல்வதற்காகச் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சொகுசு பேருந்தில் சென்றுள்ளார். அவருடன் அவரது சகோதரரும் இருந்துள்ளார்.
இதையடுத்து பேருந்து மேல்மருவத்தூர் அருகே சென்றபோது அவரது சகோதரர் செந்தில்குமாரை எழுப்பியபோது எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்தை நிறுத்தியுள்ளனர். பின்னர் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் செந்தில் குமார் உடலைமீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொந்த ஊருக்குச் செல்லும்போது பேருந்திலேயே மாரடைப்பு ஏற்பட்டுப் பயணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!