Tamilnadu
சொந்த ஊருக்குச் செல்லும்போது நடந்த துயரம்.. மாரடைப்பு ஏற்பட்டு பேருந்திலேயே உயிர்விட்ட பயணி!
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சொந்த ஊருக்குச் செல்வதற்காகச் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சொகுசு பேருந்தில் சென்றுள்ளார். அவருடன் அவரது சகோதரரும் இருந்துள்ளார்.
இதையடுத்து பேருந்து மேல்மருவத்தூர் அருகே சென்றபோது அவரது சகோதரர் செந்தில்குமாரை எழுப்பியபோது எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்தை நிறுத்தியுள்ளனர். பின்னர் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் செந்தில் குமார் உடலைமீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொந்த ஊருக்குச் செல்லும்போது பேருந்திலேயே மாரடைப்பு ஏற்பட்டுப் பயணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!