Tamilnadu
கோவில் குளத்தில் டிராக்டர் டிரைலர் திருட்டு.. வலைவீசி தேடிய போலிஸார்.. இறுதியில் சிக்கிய பாஜக தலைவர்!
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அருகே ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருப்பாற்கடல் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தில் தற்போது நகராட்சி சார்பில் பராமரிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இராஜபாளையத்தை சேர்ந்த தனியார் ஒப்பந்தக்காரர் இந்த பணியை செய்து வருகிறார். கட்டிட பணிகளுக்காக அவ்வப்போது அப்பகுதியில் கண்டெய்னர், டிராக்ட்டர், டிரைலர் மற்றும் கட்டுமான பொருட்கள் சேமிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த டிராக்டர் ட்ரெய்லர் ஒன்று காணாமல் போனது. இது தொடர்பாக கட்டுமான ஊழியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வந்தனர். இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடம்பன்குளம் பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர்களின் மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் அவரது சகோதரர் கருப்பசாமி ஆகியோருக்கு இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.
இதையடுத்து நகர காவல் நிலைய போலீசார் அவர்களை அழைத்து விசாரணை நடத்தியதில் கண்ணன் மற்றும் கருப்பசாமி இருவர் தான் ட்ரெய்லரை திருடியதாக ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்த நகர காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். பொதுப்பணியில் ஈடுபட்டிருந்த டிரைலரை பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளருவர் திருடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!