Tamilnadu
கோவில் குளத்தில் டிராக்டர் டிரைலர் திருட்டு.. வலைவீசி தேடிய போலிஸார்.. இறுதியில் சிக்கிய பாஜக தலைவர்!
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அருகே ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருப்பாற்கடல் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தில் தற்போது நகராட்சி சார்பில் பராமரிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இராஜபாளையத்தை சேர்ந்த தனியார் ஒப்பந்தக்காரர் இந்த பணியை செய்து வருகிறார். கட்டிட பணிகளுக்காக அவ்வப்போது அப்பகுதியில் கண்டெய்னர், டிராக்ட்டர், டிரைலர் மற்றும் கட்டுமான பொருட்கள் சேமிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த டிராக்டர் ட்ரெய்லர் ஒன்று காணாமல் போனது. இது தொடர்பாக கட்டுமான ஊழியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வந்தனர். இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடம்பன்குளம் பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர்களின் மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் அவரது சகோதரர் கருப்பசாமி ஆகியோருக்கு இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.
இதையடுத்து நகர காவல் நிலைய போலீசார் அவர்களை அழைத்து விசாரணை நடத்தியதில் கண்ணன் மற்றும் கருப்பசாமி இருவர் தான் ட்ரெய்லரை திருடியதாக ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்த நகர காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். பொதுப்பணியில் ஈடுபட்டிருந்த டிரைலரை பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளருவர் திருடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - தமிழக வேட்பாளருக்கு திமுகவின் ஆதரவைக்கேட்பது நகைப்புக்குரியது: முரசொலி!
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?