Tamilnadu
பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்... AC கம்ப்ரசர் வெடித்ததில் ஏசி மெக்கானிக் 2 பேர் பரிதாப பலி!
சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவர் AC பழுது பார்க்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கிண்டி அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனதில் பழுதடைந்த AC-யை பழுதுபார்ப்பதற்காக சின்னதுரை சென்றுள்ளார்.
மேலும் தன்னுடன் வேலை பார்க்கும் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த இந்திரகுமார்,கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சரவணன் (41) ஆகிய இருவரையும் சின்னதுரை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்குச் சென்ற மூன்று பேரும் 3வது மாடியிலிருந்த ஏசி அவுட்டோர் கம்ப்ரசரை பழுதுபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென காஸ் கசிந்து வெடித்தது. இந்த வெடிவிபத்தில் சின்னதுரை, இந்திரகுமார், சரவணன் ஆகிய 3 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து இந்த 3 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சின்னதுரை, இந்திரகுமார் ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பரங்கிமலை போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Also Read
-
மக்களுக்கு வழங்கும் ‘பை’யில் கூட ஊழல்! : த.வெ.க.வின் முகமூடியை கிழித்து காய வைத்த பெண்!
-
பிரேசிலின் நம்பிக்கை... இறுதி விசிலுடன் உடைந்த கனவு - கண்ணீரில் முடிந்த நெய்மரின் உலகக் கோப்பை பயணம்!
-
கோவையில் 1000 சவரன் நகை திருட்டு : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
-
“ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா?” : தி.மு.க கடும் கண்டனம்!
-
“விஜயின் முகத்திரை கொஞ்சம் கொஞ்சமாக விரைவில் கிழியும்” : முரசொலி தலையங்கம்!