Tamilnadu
சாலையில் சென்ற போது திடீரென பற்றி எரிந்த கார்.. உயிர் தப்பிய ஓட்டுநர்: நள்ளிரவில் நடந்த பயங்கரம்!
சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதிஷ்குமார். இவருக்குச் சொந்தமான டவேரா கார் ஒன்று உள்ளது. இவரின் காரில், பெருங்களத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் ஊழியர்களை பணிக்கு அழைத்துச் சென்று வீட்டுக்கு விடுவது வழக்கம்
இந்நிலையில், இன்று நள்ளிரவு வழக்கம்போல் திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் ஊழியர்களை இறக்கிவிட்டு , ஓட்டுநர் ராம்கி எண்ணூரில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
இதையடுத்து அஜாக்ஸ் பேருந்து நிலையம் சென்றபோது, திடீரென காரின் முன்பக்கத்திலிருந்து புகை வந்துள்ளது. இதனால் உடனடியாக காரை நிறுத்தி ராம்கி கீழே இறங்கியுள்ளார். அடுத்த நில நிமிடத்திலேயே கார் முழுவதுமாக பற்றி எரிந்துள்ளது.
இது பற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் பற்றி எரிந்து கொண்டிருந்த காரை தண்ணீர் பீச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து சேதமானது. இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!
-
கிர்கிஸ்தானில் வெடித்த வன்முறை : குறிவைக்கப்படும் வெளிநாடு மாணவர்கள் : இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை !
-
அயலகத் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு: உறுப்பினர் பதிவு முதல் கல்வி, மருத்துவ உதவி வரை - முழு விவரம்!
-
"நாங்கள் இனப்படுகொலை செய்யவில்லை, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை" - சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் வாதம் !
-
கடும் மழை எச்சரிக்கை : திண்டுக்கல் மக்கள் கவனத்திற்கு... அவசர எண் அறிவிப்பு - முழு விவரம்!