Tamilnadu
திருச்சி : காணாமல் போன குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்ட தமிழக காவல்துறை.. பொதுமக்கள் பாராட்டு !
திருச்சி மாவட்ட ஸ்ரீரங்கம் பழைய இபி சாலையை சேர்ந்தவர் முருகன். மூங்கில் கூடை வியாபாரம் செய்து வரும் இவருக்கு 3 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் சிறுவன் நேற்று சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமாகியுள்ளார்.
இதையறிந்த சிறுவனின் பெற்றோர், பாட்டி உள்ளிட்டோர் தேடி அழைந்தபோது அவர் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே சமயபுரம் பேருந்து நிலையம் பகுதியில் ஆண் குழந்தை ஒன்று தனியாக நின்று அழுதுகொண்டிருந்ததாக அப்பகுதி மக்கள், காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து சமயபுரம் காவல் துறையினர் ஸ்ரீரங்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் அங்கு சென்று பார்க்கையில், அது முருகனின் குழந்தை என்று உறுதியானது. பிறகு அந்த குழந்தையை மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து காணாமல் போன குழந்தை அங்கே எப்படி போனது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பெண் ஒருவர் இந்த சிறுவனை கூட்டி சென்றது பதிவாகியிருந்தது.
இதைத்தொடர்ந்து சிறுவனை கூட்டி சென்ற அந்த பெண் யார் என்றும், கடத்த முயன்றால் ஏன் அங்கே தனியாக விட்டு சென்றார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
- 
	    
	      
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!
 - 
	    
	      
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதி என்ன? - முழு விவரம்!
 - 
	    
	      
ஒன்றிய அரசின் வழக்கை நான் விசாரிக்க கூடாது என அரசு நினைக்கிறது- தலைமை நீதிபதி கவாய் பகிரங்க குற்றச்சாட்டு
 - 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
 - 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!