Tamilnadu
“அரசு பள்ளியில் இருந்து மின்சாரத்தை திருடிய பாஜகவினர்” : அண்ணாமலை கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் அராஜகம்!
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்ட நிகழ்ச்சியிலேயே அரசு பள்ளியில் இருந்து மின்சாரத்தை திருடி, பா.ஜ.க நிகழ்ச்சியை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடுவதாகக் கூறி, இத்தகைய திருட்டு சம்பவத்தை பா.ஜ.கவினர் அரங்கேற்றியுள்ளனர். விருதாச்சலம் அருகே அலிச்சகுடி கிராமத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி பா.ஜ.க சார்பில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த நிகழ்ச்சியில் போது பா.ஜ.க சார்பில் ஒலி, ஒளி நிகழ்ச்சி மற்றும் ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தேவையான மின்சாரத்தை அருகில் இருந்த அரசு பள்ளியின் கட்டிடத்தின் மின் மீட்டரில் இருந்து திருட்டுத்தனமாக மின் இணைப்பு எடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பா.ஜ.கவினரின் இச்செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
- 
	    
	      
“கால்களில் விழுந்து பழக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
 - 
	    
	      
”பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” : Chennai Press Club கண்டனம்!
 - 
	    
	      
தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக 2 பேர் நியமனம் : கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
 - 
	    
	      
வேலூரில் 49,021 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
 - 
	    
	      
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!