Tamilnadu
“அரசு பள்ளியில் இருந்து மின்சாரத்தை திருடிய பாஜகவினர்” : அண்ணாமலை கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் அராஜகம்!
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்ட நிகழ்ச்சியிலேயே அரசு பள்ளியில் இருந்து மின்சாரத்தை திருடி, பா.ஜ.க நிகழ்ச்சியை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடுவதாகக் கூறி, இத்தகைய திருட்டு சம்பவத்தை பா.ஜ.கவினர் அரங்கேற்றியுள்ளனர். விருதாச்சலம் அருகே அலிச்சகுடி கிராமத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி பா.ஜ.க சார்பில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த நிகழ்ச்சியில் போது பா.ஜ.க சார்பில் ஒலி, ஒளி நிகழ்ச்சி மற்றும் ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தேவையான மின்சாரத்தை அருகில் இருந்த அரசு பள்ளியின் கட்டிடத்தின் மின் மீட்டரில் இருந்து திருட்டுத்தனமாக மின் இணைப்பு எடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பா.ஜ.கவினரின் இச்செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!