Tamilnadu
குளிக்க சுடுதண்ணீர் வைத்தபோது துயரம்..மின்சாரம் பாய்ந்து ஒரே இடத்தில் தாய்,மகளுக்கு நேர்ந்த சோகம் !
கோவை விஸ்வநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்த். இவரது மனைவி கார்த்திகா. இந்த தம்பதிக்கு அர்ச்சனா (வயது 18) என்ற மகள் இருக்கிறார். ஆனந்த்திருச்சியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். மகள் அர்ச்சனா தனியார் கல்லூரியில் பயோடெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில், வழக்கம் போல அர்ச்சனா கல்லூரிக்கு செல்ல குளியல் அறைக்கு சென்று அங்கிருந்த வாளியில் தண்ணீரை நிரப்பி அதி்ல் வாட்டர் ஹீட்டர் கருவியை வைத்து சுவிட்சை ஆன் செய்துள்ளார். சிறிது நேரத்தில் தண்ணீர் சூடாகியுள்ளது.
அதன்பின்னர் சுவிட்சை ஆப் செய்த அர்ச்சனா அவசரத்தில், வாட்டர் ஹீட்டரை எடுக்காமல் குளிக்க தண்ணீரை தொட்டுள்ளார். அப்போது அவர்மீது, மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் அர்ச்சனா அலறித்துடித்துள்ளார். மகளின் அலறல் சத்தம் கேட்டு சமையல் அறையில் இருந்து அவரது தாயார் கார்த்திகா ஓடி வந்து மகளை காப்பாற்ற அவரை தொட்டுள்ளார். அப்போது அவர்மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் ஒரே இடத்தில் தாய்,மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!