Tamilnadu
ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்க ஊர் பேருந்து எங்கே நிற்கும் என்று தெரியுமா?: இதோ முழு தகவல்!
ஆயுதபூஜை பண்டியை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் இருந்து 2050 சிறப்பு பேருந்துகளும், செப்.30 மற்றும் அக்டோபர் 1ம் தேதி 2 நாட்களக்கு 3 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பேருந்து நிலையங்களின் விவரம் பின்வருமாறு:-
1. தாம்பரம் மெப்ஸ்(MEPZ) பேருந்து நிறுத்தம்:
திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் போளூர் சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி. கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
2. பூவிருந்தவல்லி டைஸ் (மாபோ.சு. பூவிருந்தவல்லி பணிமனை அருகில்)
வேலூர், ஆரணி, ஆற்காடு. திருப்பத்தூர். காஞ்சிபுரம். செய்யாறு. ஒசூர் திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்
3.கோயம்பேடு பேருந்து நிலையம்
மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழி ECR), மயிலாடுதுறை கும்பகோணம். திருவாரூர். திருத்துறைப்பூண்டி நாகப்பட்டிணம். கோங்கண்ணி, அரியலூர், ஜெங்கொண்டம். திருச்சி, மதுரை, திருநெல்வேலி செங்கோட்டை தூத்துக்குடி திருச்செந்தூர், நாகர்கோவில் தன்னியாகுமரி விழுப்புரம். கள்ளக்குறிச்சி காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர். திருப்பூர், ஈரோடு, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், பெங்களூம், திருவனந்தபுரம் மற்றும் குருவாயூர்.
Also Read
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!
-
5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள்…அனைத்து தரப்பினருக்குமானது திராவிட மாடல் ஆட்சி: துணை முதலமைச்சர் பேச்சு!
-
சாலைப் பயணத்திற்கு இனி கவலை இல்லை… ரூ.1,843.85 கோடி செலவில் 11 சாலைகள்: திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
ரூ.211.90 கோடியில் 45 முடிவுற்ற, ரூ.53.76 கோடியில் 9 புதிய திட்டப் பணிகள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!