Tamilnadu
தி.மு.க முப்பெரும் விழாவில் விருது பெற்ற சி.பி.திருநாவுக்கரசு , குன்னூர் சீனிவாசன் ஆற்றிய அரும்பணிகள் !
புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசு
1) புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசு அவர்களுக்கு, ‘பாவேந்தர் விருது’ வழங்கிச் சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
1965-ல் புதுச்சேரயில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், அப்போது சிறை சென்ற கழக தோழர்களுக்காக வழக்கறிஞராக பங்கேற்றார். மிசா காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
1991-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் கலைஞரின் அரசு கலைக்கப்பட்டதால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். புதுச்சேரி கழக துணை அமைப்பாளர் பொறுப்புக்கு உயர்ந்து சிறப்பாக செயல்பட்டார். புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார்.
குன்னூர் சீனிவாசன்
2) குன்னூர் சீனிவாசன் அவர்களுக்கு, ‘பேராசிரியர் விருது’ வழங்கிச் சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
1950ம் ஆண்டு தனது 19ம் வயதில் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் வந்தியிருப்பு ஒன்றிய கழகத்தின் முதல் செயலாளரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுகவின் அனைத்து போராட்டங்களிலும் கலந்துகொண்டு பாளையம்கோட்டை,சேலம்,மதுரை, திருச்சி ஆகிய மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!