Tamilnadu
மதுரை:வீட்டிலிருந்த 60 பவுன் நகைகளை திருடி INSTA ஆண் நண்பருக்கு கொடுத்த 16வயது சிறுமி.. சிக்கியது எப்படி?
தற்போதுள்ள இணைய உலகில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மொபைல் போன்கள் இல்லாமல் இருப்பதில்லை. அதிலும் சமூக வலைதளங்களான முகநூல், வாட்சப், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. இதில் இன்ஸ்டாகிராம் மூலம் தெரியாத நண்பர்களுடன் நட்புறவு கொண்டு அவர்கள் வலையில் சிக்கிய பெண் சிறுவர்கள் ஏராளம்.
அந்த வகையில் மதுரையை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராமில் 22 வயதுடைய இளைஞர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். ஆனால் அந்த இளைஞரோ சிறுமியை தவறாக பயன்படுத்த எண்ணியுள்ளார். அதன்படி சிறுமியிடம் ஒருமுறை அவசரத்தேவை என்று கூறி பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரிடம் பணம் இல்லை என்று கூறியதால் வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக்கொடுக்கும்படி கூறியுள்ளார்.
சிறுமியோ தனது வீட்டின் பீரோவில் இருந்த நகைகளில் கொஞ்சத்தை எடுத்து கொடுத்துள்ளார். இப்படியே சில முறை தொடர்ந்து கேட்டதால் சிறுமியும் மறுப்பு தெரிவிக்காமல் எடுத்துக்கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தனது பீரோவில் உள்ள நகை காணாமல் போவதாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு எய்து அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் சிறுமிதான் தனது இன்ஸ்டா நண்பருக்கு நகைக்களை கொடுத்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
- 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
 - 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!