Tamilnadu
வளர்ப்பு நாயோடு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர்.. விசாரணையில் போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது வீட்டின் முதல் மாடியில் ராஜ் என்பவர் இரண்டு வருடங்களாக வாடகைக்குக் குடியிருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், பாஸ்கர் வீட்டு வாடகை வாங்குதற்காக வந்துள்ளார். அப்போது ராஜ் குடியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் அடித்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பாஸ்கர் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் போலிஸார் அங்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தான் வளர்த்துவந்த நாயோடு சேர்த்து ராஜ் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து போலிஸார் நாய் மற்றும் ராஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வீட்டின் சுவரில் சென்னையில் உள்ள தன்னுடைய மனைவி இறந்து விட்டதால் இனி நான் வாழ விரும்ப வில்லை என எழுதி இருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த சோகத்தில் கணவன் வளர்ப்பு நாயோடு சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !