Tamilnadu

பாலியல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல்.. கொலை செய்து சாலை ஓரத்தில் வீசப்பட்ட தொழிலதிபர்..

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 67). சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமா தயாரிப்பாளராக இருந்த இவர், தற்போது அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொடர்புடைய தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்றைய முன்தினம் வெளியே சென்றிருந்த இவர் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. எனவே அவரது மகன் அவர் மொபைல் எண்ணை தொடர்பு கொண்டபோது, அது switched off ஆகியிருந்தது. இதனால் அவர், தனது தந்தையின் கார் GPS-ஐ வைத்து தேடியுள்ளார்.

அப்போது அது விருகம்பாக்கத்திலுள்ள ஒரு பகுதியை காட்டியுள்ளது. அங்கே சென்று பார்த்தபோது காரினுள் அவர் இல்லை. இதையடுத்து அவரது மகன் ஆதம்பாக்கம் காவல்துறையில் புகாரளித்தார்.

பின்னர் நேற்று காலை சுமார் 6 மணி அளவில் விருகம்பாக்கம் நெற்குன்றம் சாலையில் துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, அங்கு சாலையோரம் ஒரு பாலீதீன் மூட்டை கிடந்துள்ளது. அதனை பிரித்து பார்த்தபோது, அதில் இரத்த காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கை கால்கள் கட்டப்பட்டு வாயில் துணியுடன் கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க விரைந்த வந்த அவர்கள் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த சடலம் குறித்து நடத்திய விசாரணையில், அவர் காணாமல் போன பாஸ்கரன் என்று தெரியவந்தது.

பின்னர் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கிற்க்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி பணியில் காவல் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது திருவள்ளூரில் பதுங்கியிருந்த கணேசன் என்பவரை தனிப்படை காவல் அதிகாரிகள் கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில், அவர் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதும், இதனால் கடந்த இரண்டு வருடங்களாகவே பாஸ்கரனுக்கு கணேசன் பாலியல் தொழிலுக்காக பெண்களை அனுப்பி வந்ததும் தெரியவந்தது.

மேலும் சம்பவத்தன்று இதே போல், பாஸ்கரன் கணேசனை தேடி வந்திருக்கிறார். அப்போது பாலியல் தேவைகளுக்காக குறிப்பிட்ட இரண்டு பெண்களை பாஸ்கரன் கேட்டதாகவும் அதற்கு கணேசன் அவர்கள் வர தாமதமாகும் கூறியதால் கோபப்பட்ட பாஸ்கரன் கணேசனை திட்டியுள்ளார். இது கைகலப்பாக மாற அதில் பாஸ்கரனை கீழே தள்ளிவிட்டதில் தலையில் அடிபட்டு மயங்கி விழுந்துள்ளார்.

மயங்கி விழுந்த அவரை ஒரு தூணில் கட்டிப்போட்டு, மீண்டும் ஒரு இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். பின்னர் அவரது உடலை கை, கால்களை கட்டி வாயில் துணியை கட்டி பாலித்தீன் கவரில் பேக் செய்து சாலை ஓரம் வீசி சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொலை நடந்த 24 மணி நேரத்துக்குள் தனிப்படை போலீசார் கொலை குற்றவாளி கைது செய்துள்ளனர் என்பது குறிப்பித்தக்கது.

Also Read: இந்த அரசு சட்டத்தின் - நீதியின் - சமூகநீதியின் அரசாக செயல்படுகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!