Tamilnadu
"வேணும்னா எங்க கம்பெனியில் வேலை வாங்கி தாரேன்.. வாங்க" - எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த செய்தியாளர்!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பாஜகமூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர் ராணுவ வீரர் இறப்பின் போது நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பான பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாகக் கூறப்படும் ஆடியோ தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு ஆவேசமான எச்.ராஜா, இது போலியான ஆடியோ என்று எங்கள் மாவட்ட தலைவர் கூறியிருக்கிறார். யாரோ மிமிக்ரி செய்து வெளியிட்டுள்ள ஆடியோவை பற்றி எல்லாம் நீங்கள் கேட்கிறீர்கள் அதற்கெல்லாம பதில் சொல்ல முடியாது எனக் கூறினார்.
மேலும், செய்தியாளரின் குடும்ப உறுப்பினர் குறித்தும் அவதூறாகப்பேசினார். தொடர்ந்து செய்தியாளருடன் வாக்குவாதம் செய்த எச்.ராஜா, செய்தியாளரை பார்த்து நேர்மையாக இருக்க வேண்டுமானால் என்னிடம் வாருங்கள் நான் வேலை தருகிறேன்! என கூறினார்.
உடனே இதற்கு பதிலடி கொடுத்த செய்தியாளர், வேலையெல்லாம் எனக்கு வேண்டாம், உங்களுக்கு வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள், எங்கள் கம்பெனியில் வேலை வாங்கி தருகிறேன் என பதிலடி கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Also Read
-
“தமிழ்நாட்டின் நிதிப் பொறுப்பும் பட்ஜெட் மேலாண்மையும் கட்டமைப்பிற்குள் உள்ளது” : இந்து நாளேடு பாராட்டு!
-
தஞ்சையில் அடுத்த மகளிர் அணி மாநாடு! - தயாராகும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” : முழு விவரம் உள்ளே!
-
“மதவாத அரசியல் போதையை தடுத்திட நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும்!” : திருச்சியில் முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு 21 லட்சம் வாகனங்கள் பதிவு : கடந்த ஆண்டை விட 8.4% வாகனங்கள் விற்பனை!
-
2025 ஆம் ஆண்டில் 2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!