Tamilnadu
International Airportனா சும்மாவா.. மும்பைக்கு பிறகு அதிநவீன வசதியை கொண்டுள்ள சென்னை !- அது என்ன தெரியுமா?
இந்தியாவில் முதல் முறையாக மும்பை சிவாஜி விமானநிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்கும் வகையில் கேப்சூல் படுக்கை அமைக்கப்பட்டது. இது பயணிகளிடையே வரவேற்ப்பை பெற்ற நிலையில் தற்போது அது சென்னை விமான நிலையத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது சென்னை விமான நிலையத்தில் 4 படுக்கைகள் கொண்ட ' கேப்சூல் ஓட்டல் ' புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது சோதனை அடிப்படையில் 4 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அதன் வரவேற்ப்பை பொறுத்து விரிவுபடுத்தப்படும் என்றும் விமான நிலைய நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதில் முதல் 2 மணி நேரத்துக்கு ரூபாய் 600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரத்துக்கு பின்னர் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூபாய் 250 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த படுக்கையில் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். அதே நேரம் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் சேர்ந்து தங்க அனுமதிக்கப்படுவர்.
இங்கு உடமைகள் வைப்பதற்கான இடம் , செல்போன் சார்ஜ் செய்ய வசதி , புத்தகம் படிப்பதற்கான வசதி ஆகியவை இடம் பெற்றுள்ளது. இந்த படுக்கைகளில் ஒரு விமானத்தில் சென்னை வந்து மற்றொரு விமானத்தில் பயணம் செய்ய காத்திருக்கும் ' டிரான்சிட் ’ பயணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும், பயணிகளாக இல்லாதவர்களுக்கு தங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
குழந்தைகளின் கல்விக்கு உதவும் உரிமைத் தொகை : முதலமைச்சரிடம் மகிழ்ச்சியுடன் சொன்ன மேகலா என்ற பெண் !
-
எப்படி வந்து சிக்கிருக்கேன் பாத்தியா?: பாஜக அமைச்சர் அட்ராசிட்டியால் விழிப்பிதுங்கிய பெண் காவலர்-பின்னணி?
-
ஓமன் நாட்டில் பணிபுரிய அறிய வாய்ப்பு... சம்பளம் எவ்வளவு? என்ன பணி? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம் உள்ளே!
-
“திட்டத்தை முடக்க நினைத்தவரின் சதியை முறியடித்த முதலமைச்சர்...” - முரசொலி பாராட்டு!
-
“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!