Tamilnadu
International Airportனா சும்மாவா.. மும்பைக்கு பிறகு அதிநவீன வசதியை கொண்டுள்ள சென்னை !- அது என்ன தெரியுமா?
இந்தியாவில் முதல் முறையாக மும்பை சிவாஜி விமானநிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்கும் வகையில் கேப்சூல் படுக்கை அமைக்கப்பட்டது. இது பயணிகளிடையே வரவேற்ப்பை பெற்ற நிலையில் தற்போது அது சென்னை விமான நிலையத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது சென்னை விமான நிலையத்தில் 4 படுக்கைகள் கொண்ட ' கேப்சூல் ஓட்டல் ' புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது சோதனை அடிப்படையில் 4 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அதன் வரவேற்ப்பை பொறுத்து விரிவுபடுத்தப்படும் என்றும் விமான நிலைய நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதில் முதல் 2 மணி நேரத்துக்கு ரூபாய் 600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரத்துக்கு பின்னர் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூபாய் 250 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த படுக்கையில் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். அதே நேரம் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் சேர்ந்து தங்க அனுமதிக்கப்படுவர்.
இங்கு உடமைகள் வைப்பதற்கான இடம் , செல்போன் சார்ஜ் செய்ய வசதி , புத்தகம் படிப்பதற்கான வசதி ஆகியவை இடம் பெற்றுள்ளது. இந்த படுக்கைகளில் ஒரு விமானத்தில் சென்னை வந்து மற்றொரு விமானத்தில் பயணம் செய்ய காத்திருக்கும் ' டிரான்சிட் ’ பயணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும், பயணிகளாக இல்லாதவர்களுக்கு தங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!
-
காந்தி பெயரை நீக்கதான் முடியும், இதை உங்களால் சிதைக்க முடியாது : முரசொலி தலையங்கம்!
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!