Tamilnadu
‘பாஜக ஒரு விஷம்.. அங்க பாதுகாப்பில்லை’ : முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாஜக மகளிரணி செயலாளர் !
கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலுள்ள ஆச்சிப்பட்டி பகுதியில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னணியில் மாற்றுக்கட்சியினர் 50,000 பேர் இணையும் விழா நடைபெற்று வருகிறது. இதில் அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., உள்ளிட்ட பல கட்சிகளின் உறுப்பினர்கள் திமுகவில் இணைகின்றனர்.
அந்த வகையில் பா.ஜ.க., மாநில மகளிர் அணி செயலாளராக இருந்த மைதிலி தற்போது திமுகவில் இணைந்துள்ளார். திமுகவில் இணைந்த பிறகு அவர் பேசும்போது, "கடந்த 1999 ஆம் ஆண்டு பா.ஜ.க-வில் மாவட்ட அணியின் பொதுச்செயலாளராக இருந்தேன். இப்படி படிப்படியாக பா.ஜ.க., மாநில மகளிர் அணி செயலாளராக பணிபுரிந்து வந்தேன். ஆனால் கடந்த ஓராண்டு காலமாக பாஜகவில் பணபடைத்தவர்களுக்கே பதவி என்று மாறியது.
அதனால் நான் அந்த கட்சியில் இருந்து வெளியேறினேன். முதலமைச்சர் ஆட்சிக்கு வந்த பிறகு, மகளிர் நலனுக்காக பல திட்டங்கள் கொண்டு வந்துள்ளார். தற்போது திமுகவின் இணைந்திருக்கும் நான், மகளிர் நலனுக்காக பாடுபடுவேன் என உறுதியளிக்கிறேன்" என்றார்.
Also Read
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!