Tamilnadu
‘பாஜக ஒரு விஷம்.. அங்க பாதுகாப்பில்லை’ : முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாஜக மகளிரணி செயலாளர் !
கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலுள்ள ஆச்சிப்பட்டி பகுதியில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னணியில் மாற்றுக்கட்சியினர் 50,000 பேர் இணையும் விழா நடைபெற்று வருகிறது. இதில் அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., உள்ளிட்ட பல கட்சிகளின் உறுப்பினர்கள் திமுகவில் இணைகின்றனர்.
அந்த வகையில் பா.ஜ.க., மாநில மகளிர் அணி செயலாளராக இருந்த மைதிலி தற்போது திமுகவில் இணைந்துள்ளார். திமுகவில் இணைந்த பிறகு அவர் பேசும்போது, "கடந்த 1999 ஆம் ஆண்டு பா.ஜ.க-வில் மாவட்ட அணியின் பொதுச்செயலாளராக இருந்தேன். இப்படி படிப்படியாக பா.ஜ.க., மாநில மகளிர் அணி செயலாளராக பணிபுரிந்து வந்தேன். ஆனால் கடந்த ஓராண்டு காலமாக பாஜகவில் பணபடைத்தவர்களுக்கே பதவி என்று மாறியது.
அதனால் நான் அந்த கட்சியில் இருந்து வெளியேறினேன். முதலமைச்சர் ஆட்சிக்கு வந்த பிறகு, மகளிர் நலனுக்காக பல திட்டங்கள் கொண்டு வந்துள்ளார். தற்போது திமுகவின் இணைந்திருக்கும் நான், மகளிர் நலனுக்காக பாடுபடுவேன் என உறுதியளிக்கிறேன்" என்றார்.
Also Read
-
“குஜராத் மோடியா? இந்த லேடியா?” என்று சவால்விட்டவர் மீது மோடிக்கு திடீர் பாசம்! : முதலமைச்சர் விமர்சனம்!
-
நடிகர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனைவி சங்கீதா! : காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி!
-
கோவை : தந்தை பெரியார் நூலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு - பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு!
-
“குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த இந்தியா… வெளியேறிய ஜிம்பாப்வே அணி… இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்!