Tamilnadu

நிறைமாத கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவம்.. உறவினர்கள் செயலால் தாய், குழந்தைக்கு நேர்ந்த அவலம் !

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள நிமினி வயல் என்ற பகுதி பகுதியில் வசித்து வருபவர் தேவன் - லட்சுமி தம்பதியினர். கூலி தொழிலாளர்களான இவர்களுக்கு 21 வயதில் பிரியா என்ற ஒரு மகள் இருந்தார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று பிரியாவுக்கு உடல் நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு அவரது பெற்றோர்கள் கொண்டுவந்தனர். அங்கே பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் பிரியவுக்கு என்னாச்சு என்று கேட்டபோது, பெற்றோர்கள் முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளனர்.

இதனால் சந்தகமடைந்த மருத்துவர்கள் காவல்துறைக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வந்த காவல்துறையினர் பிரியாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைக்கத்தனர். மேலும் பிரியாவின் மரணம் குறித்து அவரது பெற்றோர்கள், உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அதாவது இறந்துபோன பிரியாவுக்கு திருமணம் ஆகாத நிலையில், 8 மாத நிறை கர்ப்பிணியாக இருந்துள்ளார். மேலும் இது குறித்து அவர்களது பெற்றோர்கள் வெளியில் யாரிடமும் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில், பிரியாவுக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர்கள், உறவினர்கள் என அனைவரும் வந்து அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அப்படி பிரசவம் பார்க்கையில் பிறந்த குழந்தை இறந்தே பிறந்துள்ளது. மேலும் பிரியவும் மயக்கநிலைக்கு போயுள்ளார்.

இந்த சூழலில் ஒரு கும்பல் பிரியாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, மற்ற சிலர் இறந்தே பிறந்த குழந்தையை தங்களது வீட்டின் பின்புறத்தில் புதைத்துள்ளனர். பெற்றோர்கள் அளித்த வாக்குமூலத்தால் அதிர்ச்சியடைந்த காவல்துறை, புதைக்கப்பட்ட குழந்தையின் உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், உண்மையிலேயே பிரியா பிரசவத்தின் போது தான் இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு இதேபோல், இராணிப்பேட்டை மாவட்டத்தில் youtube பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால், குழந்தை இறந்து பிறந்துள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: டெல்லியில் மீண்டும் போராட்டம் தொடக்கம்..மோடி அரசை கண்டித்து தலைநகரின் திரண்ட விவசாயிகள் !