Tamilnadu
ஆரணி அருகே கரணம் அடித்த கபடி வீரர் உயிரிழப்பு.. கோவில் திருவிழாவில் நடந்த சோகம் !
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் பெரியபுறங்கணி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ் என்பவர் மாநில அளவிலான கபடி போட்டியில் விளையாடிகொண்டிருந்தபோது காயமடைந்து கபடி களத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த மற்றொரு கபடி வீரர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கோவில் திருவிழாவில் கபடி வீரர் வினோத்குமார் என்பவர் கரணம் அடிக்கும் போது அவரின் தலை தரையில் மோதியதில் அங்கேயே மயக்கமடைந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
தொடர்ந்து அவருக்கு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அவரின் மரணம் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழ்ந்த வினோத்துக்கு சிவகாமி என்ற மனைவியும் சந்தோஷ், கலையரசன் என்ற மகன்களும் உள்ளனர்.
Also Read
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!