Tamilnadu
"தமிழ்நாட்டில் மதவாத கும்பலுக்கு இடமில்லை.." - அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம் !
சேலம் மாவட்டம் ஆத்தூர் அண்ணா கலையரங்கத்தில் திராவிட கழக நிர்வாகி தங்கவேலுவின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், ”அன்று இடுப்பில் துண்டை கட்டிய காலத்தில் குப்பன், சுப்பன் என ஒருமையில் அழைத்தனர். ஆனால் விழா மேடைகளில் தற்போது குப்பனுக்கும், சுப்பனுக்கும் தோலில் சால்வை அணிவித்து மரியாதைக்குரிய குப்பன் அவர்களே, மரியாதைக்குரிய சுப்பன் அவர்களே என அழைக்கப்படுகிறது. இந்த நிலையை மாற்றியது திராவிட இயக்கம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜ.க-வினர் செருப்பு வீசப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு, “தமிழக முதல்வர் பொது வெளியில் அமைச்சர்கள் நாகரீகமாக பேச வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
ஆகவே கண்ணிய அரசியல் நடத்த வேண்டும் என்று நினைக்கிறோம். தயவு செய்து தமிழகத்தை மற்ற மாநிலங்களை போல் எண்ணவேண்டாம். இங்கு மதவாத கும்பலுக்கு இடமில்லை" என்று கண்டனம் தெரிவித்தார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!