Tamilnadu
"தமிழ்நாட்டில் மதவாத கும்பலுக்கு இடமில்லை.." - அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம் !
சேலம் மாவட்டம் ஆத்தூர் அண்ணா கலையரங்கத்தில் திராவிட கழக நிர்வாகி தங்கவேலுவின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், ”அன்று இடுப்பில் துண்டை கட்டிய காலத்தில் குப்பன், சுப்பன் என ஒருமையில் அழைத்தனர். ஆனால் விழா மேடைகளில் தற்போது குப்பனுக்கும், சுப்பனுக்கும் தோலில் சால்வை அணிவித்து மரியாதைக்குரிய குப்பன் அவர்களே, மரியாதைக்குரிய சுப்பன் அவர்களே என அழைக்கப்படுகிறது. இந்த நிலையை மாற்றியது திராவிட இயக்கம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜ.க-வினர் செருப்பு வீசப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு, “தமிழக முதல்வர் பொது வெளியில் அமைச்சர்கள் நாகரீகமாக பேச வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
ஆகவே கண்ணிய அரசியல் நடத்த வேண்டும் என்று நினைக்கிறோம். தயவு செய்து தமிழகத்தை மற்ற மாநிலங்களை போல் எண்ணவேண்டாம். இங்கு மதவாத கும்பலுக்கு இடமில்லை" என்று கண்டனம் தெரிவித்தார்.
Also Read
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல் வேலைவாய்ப்பு வரை... முதலீடுகள் செயலாக்க மாநாட்டில் நிகழ்ந்தது என்ன?
-
ரூ.62.5 கோடியில் UPSC தேர்வுப் பயிற்சி மையக் கட்டடம், செயலி... அறிமுகப்படுத்துகிறார் முதலமைச்சர்!