Tamilnadu
சென்னை விமானநிலையத்தில் ராஜநாகங்கள்.. அதிர்ந்த அதிகாரிகள்.. பின்னர் நடந்தது என்ன?
இந்தியாவில் உள்ள முக்கியமான சர்வதேச விமான நிலையங்களாக சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய 5 விமான நிலையங்கள் அமைந்துள்ளன. இதில் தென்னிந்தியாவின் நுழைவு விமான நிலையமான சென்னை விமானநிலையம் அமைந்துளது.
இங்கு தினந்தோறும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன. இதனால் இடவசதி குறைவால் சென்னைக்கு வெளியே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது வேகம் எடுத்துள்ளது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்துக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ்க்கு சொந்தமான விமானம் ஒன்று வந்துள்ளது. அதை விமானநிலைய அதிகாரிகள் வழக்கம்போல சோதனை செய்தனர்.
அப்போது அதில், ராஜநாகங்கள், குரங்குகள், மலைப்பாம்புகள் போன்ற விலங்குகள் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அவற்றை அதே விமானத்தில் மீண்டும் பாங்காக்கிற்கே திருப்பி அனுப்பி உள்ளனர். இந்த சம்பவத்தால் சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!