Tamilnadu
இளைஞரை வைத்து பல்கலைக்கழக தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த பா.ஜ.க நிர்வாகி: சிக்கியது எப்படி?
திருவாரூரில் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டத்திற்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வு எழுதிக் கொண்டிருந்த இளைஞர் மீது கண்காணிப்பாளர்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்ததில் அவர் திருவாரூரைச் சேர்ந்த திவாகர் மாதவன் என்பது தெரியவந்தது.
மேலும், அவர் திருவாரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் பாஸ்கர் என்பவருக்குப் பதிலாகத் தேர்வை எழுதுவதற்காக வந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!