Tamilnadu
இளைஞரை வைத்து பல்கலைக்கழக தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த பா.ஜ.க நிர்வாகி: சிக்கியது எப்படி?
திருவாரூரில் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டத்திற்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வு எழுதிக் கொண்டிருந்த இளைஞர் மீது கண்காணிப்பாளர்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்ததில் அவர் திருவாரூரைச் சேர்ந்த திவாகர் மாதவன் என்பது தெரியவந்தது.
மேலும், அவர் திருவாரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் பாஸ்கர் என்பவருக்குப் பதிலாகத் தேர்வை எழுதுவதற்காக வந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அணுசக்தி என்பது வணிகப் பொருள் அல்ல!” : ஒன்றிய அரசின் ‘சாந்தி’ மசோதாவைக் கண்டித்த முரசொலி தலையங்கம்!
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!