Tamilnadu

இளைஞரை வைத்து பல்கலைக்கழக தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த பா.ஜ.க நிர்வாகி: சிக்கியது எப்படி?

திருவாரூரில் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டத்திற்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வு எழுதிக் கொண்டிருந்த இளைஞர் மீது கண்காணிப்பாளர்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்ததில் அவர் திருவாரூரைச் சேர்ந்த திவாகர் மாதவன் என்பது தெரியவந்தது.

மேலும், அவர் திருவாரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் பாஸ்கர் என்பவருக்குப் பதிலாகத் தேர்வை எழுதுவதற்காக வந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ரக்ஷா பந்தன் : மறைந்த தங்கையின் சிலையை நிறுவி ஊர்வலம்.. சகோதரர்கள் செயலால் ஆந்திராவில் நெகிழ்ச்சி !