Tamilnadu
"முழு நேர அரசியல்வாதியாகச் செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி": தொல். திருமாவளவன் விமர்சனம்!
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனநாயகத்தை நெறிக்கக் கூடிய கூட்டத் தொடராக நடந்து முடித்துள்ளது என வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன்," நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் எதிர்க்கட்சிகளின் குரல் வளைய நசுக்கக் கூடியதாக இருந்தது. 4 நாட்களுக்கு முன்கூட்டியே கூட்டத்தொடரை நிறைவு செய்துள்ளனர்.
இதுவரை இல்லாத வகையில் 18 எம்.பி.க்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர். இதைப்பார்த்தாலே தெரிகிறது எந்த அளவிற்கு ஜனநாயகம் நெறிக்கப்பட்டிருக்கிறது என்று.
பீகாரில் தற்போது நிதிஷ்குமார் எடுத்துள்ள முடிவு ஒரு வரலாற்றுச் சிறப்பாக அமைந்துள்ளது. பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகி புதிய கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியமைக்கிறார். இந்தியா முழுவதும் இதுபோன்று ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைய வேண்டும்.
நடிகர் ரஜினிகாந்த் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். அரசியல் பேசலாம். அதில் கருத்து எதுவும் இல்லை. ஆனால் ஆளுநர் தன்னுடைய பொறுப்பை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஆளுநர் முழு நேர அரசியல்வாதியாகவே செயல்படுகிறார். இந்த போக்கு மாநில அரசுக்கு மட்டுமல்ல ஜனநாயகத்திற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் எதிரானது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!