Tamilnadu

காதலன் கொடுத்த 500 சவரன் நகையை குடித்தே அழித்த பெண்.. போலிஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!

சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவருக்கு திருமணமாகி தனது மனைவி, தம்பி, தாய் என்று கூட்டுகுடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் தனது தம்பியுடன் சேர்ந்து பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே ஒரு ஸ்வீட் கடை நடத்திவருகிறார். மேலும் பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார்.

கடந்த சில மாதங்களாக சேகரை அவரது மனைவி பிரிந்து அவரது அம்மா வீட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு திரும்பி வந்த சேகரின் மனைவி, வீட்டிலிருந்த பீரோவை சோதனை செய்தார். அப்போது அதிலிருந்த அவரது 300 சவரன் நகை காணாமல் போனது தெரியவந்தது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அவர்கள் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குடும்பத்தாரிடம் நடத்திய விசாரணையில், சேகரின் பதில் காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அவர், தான் தான் வீட்டிலிருந்த நகைகளை எடுத்ததாக ஒப்புக்கொண்டார். மேலும் அந்த 500 சவரன் நகைகள், 5 தங்க கட்டிகளை விற்று தனது பெண் தோழிக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து விசாரித்தபோது, தனக்கும் வேளச்சேரி கேசரிபுரத்தை சேர்ந்த ஸ்வாதி (22) இளம்பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டதாகவும், நாங்கள் இருவரும் போரூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடிக்கடி சந்திப்பதாகவும், மேலும் அவருக்காக தான் இந்த நகைகளை வைத்து கார் வாங்கி கொடுத்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதையடுடத்து போலிஸார் ஸ்வாதியை கைது செய்து விசாரணை நடத்தினர். 500 சவரன் நகைகளை என்ன செய்தான என கேட்டபோது, அனைத்தையும் விற்கு மது அருந்தி தீர்த்து விட்டதாக அவர் கொடுத்த வாக்குமூலத்தை கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஸ்வாதியிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: கேரளாவில் மூதாட்டி கொலை.. சென்னை ரயில் நிலையத்தில் போலிஸாரிடம் சிக்கிய வடமாநில வாலிபர்: நடந்தது என்ன?