Tamilnadu
வேலைக்கு போகாமல் வீட்டில் 3 மாதம் கஞ்சா செடி வளர்த்த வட இந்தியர்.. கைது செய்த போலிஸ்!
கோவை மாவட்டம், கணேசபுரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது வட இந்திய இளைஞர் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை விற்பதை போலிஸார் கண்டனர். உடனே அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை செய்தபோது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரபீன்ந்தர பரிடா என தெரியவந்தது.
மேலும் ரபீன்ந்தர பரிடா 7 ஆண்டுகளாக அதே பகுதியில் தங்கி ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இதில் அவருக்கு போதிய ஊதியம் கிடைக்கவில்லை. இதனால் அவர் தான் தங்கியுள்ள வீட்டின் அருகே கஞ்சா செடியை வளர்த்து வந்தது விசாரணையில் தெரிந்தது.
இதையடுத்து போலிஸார் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது கஞ்சா செடி இருந்தை உறுதி செய்தனர். பின்னர் போலிஸார் அந்த கஞ்சா செடியை அழித்தனர். பிறகு வட இந்தியர் ரபீந்த்ர பரிடாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவருடன் யார் யார் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
மின்துறை வெள்ளை அறிக்கை : உண்மையை திட்டமிட்டே மறைத்த த.வெ.க அமைச்சர்... அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
-
கோவையில் அத்துமீறல்: காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத த.வெ.க.வினரின் விளம்பர மோகம்!