Tamilnadu
வீட்டை விட்டு சென்ற மனைவி.. செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கணவன்!
திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் உள்ள டவரில் இன்று காலை 6 மணி அளவில் ஏரி கீழே குதித்து விடுவதாகத் தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு
சென்னை அடுத்த திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். கொத்தனார் வேலை செய்யும் இன்று மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இதனால் அவரது னைவி கோபித்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார்.
இதனால் ஆவேசமடைந்த செந்தில் குமார் அப்பகுதியிலிருந்து செல்போன் டவர் மீது ஏறி தீ அணைப்பு துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார். அப்போது அவர், நான் செல்போன் டவரில் மேல் இருக்கிறேன். சண்டைபோட்டு வெளியே சென்ற எனது மனைவியை அழைத்து வந்தால் மட்டுமே கீழே இறங்குவேன். இல்லை என்றால் குதித்து விடுவேன் என கூறியுள்ளார்.
இது குறித்துத் தீயணைப்புத் துறையினர் போலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். பிறகு போலிஸார் அப்பகுதிக்கு விரைந்து சென்று செந்தில் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிறகு போலிஸார் அவரது மனைவியை அங்கு வரவழைத்து, அவரை செந்தில் குமாருடன் செல்போனில் பேசவைத்துள்ளனர். இதன்பிறகே செந்தில் குமார் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் கணவன், மனைவியைக் காவல்நிலையம் அழைத்துச் சென்று போலிஸார் அறிவுரை கூறியுள்ளனர்.
மனைவியிடம் சேர்த்து வைக்கச் சொல்லி செல்போன் டவரில் ஏரி வாலிபர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!
-
5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள்…அனைத்து தரப்பினருக்குமானது திராவிட மாடல் ஆட்சி: துணை முதலமைச்சர் பேச்சு!
-
சாலைப் பயணத்திற்கு இனி கவலை இல்லை… ரூ.1,843.85 கோடி செலவில் 11 சாலைகள்: திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
ரூ.211.90 கோடியில் 45 முடிவுற்ற, ரூ.53.76 கோடியில் 9 புதிய திட்டப் பணிகள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!