Tamilnadu
கேமராவுக்கு போஸ் கொடுத்தபோது அருவியில் விழுந்த இளைஞர்.. நண்பர்கள் கண்முன்னே நடந்த விபரீதம்!
தமிழ்நாடு முழுவதும் இரண்டு நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாகத் திண்டுக்கல், திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த அஜய் பாண்டியன் என்ற இளைஞர் கீழ்மலை கிராமத்தில் உள்ள பெரும்பறை அருவியில் நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்ப்பாராத விதமாக கால் தவறி அருவியின் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் கதறியுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இளைஞர் அஜய் பாண்டியன் அருவியில் தவறி விழும் காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!