Tamilnadu

யாருக்காக ஏலத் தொகை குறைந்தது?.. 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பெரும் முறைகேடு: திமுக MP ஆ.ராசா குற்றச்சாட்டு!

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை 26ம் தேதி தொடங்கி ஏழு நாட்கள் நடைபெற்றன. இதில் ரூ.1,50,173 கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் போயுள்ளது. சுமார் 5 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் போகும் என அரசு எதிர்பார்த்த நிலையில், வெறும் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கே ஏலம் சென்றுள்ளது அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக தி.மு.க எம்.பி ஆ.ராசா குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆ.ராசா, "5ஜி அலைக்கற்றை குறைவான தொகைக்கு விற்கப்பட்டு மிக பெரிய மோசடி நடந்துள்ளது.

2ஜி, 3ஜி, 4ஜி ஒப்பிடும் போது 5ஜி அலைக்கற்றை ரூ. 5 முதல் 6 லட்சம் கோடிக்கு விற்பனை ஆகும் என ஒன்றிய அமைச்சர் கூறியிருந்தார். ஆனால் இப்போது 1.50 லட்சம் கோடி மட்டுமே ஏலம் நடந்துள்ளது. இதில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளது. எனவே விரிவான விசாரணை வேண்டும்.

இது யாருக்காகச் செய்யப்பட்டது? எவ்வளவு மோசடி என இந்த அரசு விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் இப்போதைய அரசு தூக்கி எறியப்பட்டு புதிய அரசு அமைந்தவுடன் அவர்கள் விசாரிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ’முதலைக்கண்ணீர்’ வார்த்தையை பயன்படுத்திய நிர்மலா சீதாராமன்.. சபாநாயகருக்கு கேள்வி எழுப்பிய சு.வெங்கடேசன்!