Tamilnadu
பழைய ரூ.20 நோட்டுடன் கடை கடையாய் திரிந்த மூதாட்டி.. பேத்திக்கு இனிப்பு வாங்க சென்றவருக்கு பரிதாப நிலை !
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை வாரச்சந்தை நடைபெறும். இந்த வாரச்சந்தையில் அந்த பகுதி மக்கள், தங்களுக்கு வேண்டிய பொருட்களை எளிய முறையில் வாங்கலாம்.
இந்த நிலையில், நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற வாரச்சந்தையில் வழக்கம்போல் அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் வந்திருந்தனர். அப்போது சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரும் அந்த வாரச்சந்தைக்கு வந்திருந்தார்.
அந்த சமயத்தில் அங்கிருந்த பொருட்களில் தேவையானவற்றை வாங்கிய மூதாட்டி, ஒரு இனிப்பு கடைக்கு சென்றிருந்தார். தனது பேத்திக்கு இனிப்பு பிடிக்கும் என்பதால் அங்கிருந்த இனிப்புகளை வாங்கியுள்ளார். வாங்கிவிட்டு கடைக்காரரிடம் பணத்தை கொடுக்கும்போது தன்னிடம் இருந்த பழைய இரண்டு 20 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார்.
அதை வாங்கிய கடைக்காரர் இது பழைய நோட்டு, செல்லாது என்று திருப்பி கொடுத்துள்ளார். இதை கேட்டு அதிர்ந்த மூதாட்டி அந்த 20 ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு அந்த பகுதியில் இருந்த கடைகளுக்கு அழைந்து திரிந்து அந்த ரூபாய் நோட்டை கொடுத்தாலும், யாரும் அதனை வாங்க முன்வரவில்லை. மூதாட்டியின் இந்த நிலையை கண்ட அங்கிருந்தவர்கள் அவரை பரிதாபமாக பார்த்தனர்.
மூதாட்டி கொடுத்த 20 ரூபாய் நோட்டானது இந்தியாவில் முதலில் அச்சடிக்கப்பட்ட 20 ரூபாய் நோட்டாகும். தற்போது இதன் மதிப்பு நம்மில் பலருக்கு தெரியாமல் இருந்தாலும், இனி வரும் காலங்களில் இது போன்ற பழைய ரூபாய் நோட்டுக்கள் லட்சக்கணக்கில் மதிப்பு பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஏன் வெளியே சென்றார்கள் : ஆஸ்திரேலிய வீரர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் - பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு!
-
பீகார் தேர்தல் - பா.ஜ.க ஆசையில் மண்ணைப் போட்டது 'இந்தியா' கூட்டணி : முரசொலி!
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!