Tamilnadu
முந்திச் செல்லும்போது தடுமாறி கீழே விழுந்த பைக் : டேங்கர் லாரியின் சக்கரத்தில் சிக்கி ஆட்டோ டிரைவர் பலி !
சென்னை கொருக்குப்பேட்டை தமிழர் நகரை சேர்ந்தவர் லோகநாதன் வயது (40). ஆட்டோ டிரைவர் இவர் தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது ECI பள்ளி அருகே சென்று கொண்டு இருந்த டேங்கர் லாரியை முந்தும் போது நிலை தடுமாறி கீழே விழுந்த லோகநாதன் மீது, பின்னால் வந்த டேங்கர் லாரியின் சக்கரம் இடது கால் தொடையில் ஏறி இறங்கியது.
அலறல் சத்தம் கேட்டு லாரியை நிறுத்தி ஒட்டுனர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டு, லோகநாதன் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலிஸார் வழக்கு பதிவு செய்து, கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த லாரி டிரைவர் கிஷோர் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
சென்னை மெட்ரோ ரயிலுக்கு நாளுக்கு நாள் ஆதரிக்கும் பொதுமக்களின் ஆதரவு : ஆகஸ்ட்டில் 99.09 லட்சம் பேர் பயணம்!
-
திராவிட மாடல் அரசு நிதி வீணாகவில்லை : Köln பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர்!
-
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!