Tamilnadu
2 ஆண்டுகளுக்கு முன்பு பட்டப்படிப்பை முடித்த தாய்: மகளுடன் சேர்ந்து TNPSC குரூப் 4 தேர்வு எழுதிய நிகழ்வு !
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி - ரவி தம்பதியினர். 12-ம் வகுப்பு வரை படித்திருந்த வளர்மதி (47), முன்பு இரண்டு முறை TNPSC குரூப் தேர்வை எழுதினார். சில இதையடுத்து அவருக்கு வீட்டில் திருமணம் நிச்சயக்கப்பட்டதால், படிப்பு, தேர்வு குறித்து அவருக்கு யோசிக்க கூட நேரமில்லை.
இவருக்கு தற்போது மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் பி.ஏ. பட்டப்படிப்பை தொலைத்தொடர்கல்வி மூலம் முடித்தார். இவரது ஒரு மகள், 12ஆம் வகுப்பு முடித்திருக்கும் நிலையில், நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார்.
இந்த நிலையில், தனது மகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், மகளுடன் சேர்ந்து தானும் TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க யோசித்துள்ளார். அதன்படி விண்ணப்பித்தும் உள்ளார். இன்று TNPSC குரூப் 4 தேர்வு நடைபெற்ற நிலையில், இருவருக்கும் திருமங்கலம் அருகே கள்ளிகுடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியுள்ளனர்.
தாயும் மகளும் ஒரே தேர்வு மையத்தில் குரூப் 4 தேர்வு எழுதியுள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் பேச்சு பொருளாக மாறியுள்ளது.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!