Tamilnadu
2 ஆண்டுகளுக்கு முன்பு பட்டப்படிப்பை முடித்த தாய்: மகளுடன் சேர்ந்து TNPSC குரூப் 4 தேர்வு எழுதிய நிகழ்வு !
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி - ரவி தம்பதியினர். 12-ம் வகுப்பு வரை படித்திருந்த வளர்மதி (47), முன்பு இரண்டு முறை TNPSC குரூப் தேர்வை எழுதினார். சில இதையடுத்து அவருக்கு வீட்டில் திருமணம் நிச்சயக்கப்பட்டதால், படிப்பு, தேர்வு குறித்து அவருக்கு யோசிக்க கூட நேரமில்லை.
இவருக்கு தற்போது மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் பி.ஏ. பட்டப்படிப்பை தொலைத்தொடர்கல்வி மூலம் முடித்தார். இவரது ஒரு மகள், 12ஆம் வகுப்பு முடித்திருக்கும் நிலையில், நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார்.
இந்த நிலையில், தனது மகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், மகளுடன் சேர்ந்து தானும் TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க யோசித்துள்ளார். அதன்படி விண்ணப்பித்தும் உள்ளார். இன்று TNPSC குரூப் 4 தேர்வு நடைபெற்ற நிலையில், இருவருக்கும் திருமங்கலம் அருகே கள்ளிகுடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியுள்ளனர்.
தாயும் மகளும் ஒரே தேர்வு மையத்தில் குரூப் 4 தேர்வு எழுதியுள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் பேச்சு பொருளாக மாறியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!