Tamilnadu
“தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை” : பக்கத்து வீட்டு இளைஞர் கைது - விசாரணையில் பகீர் தகவல்!
சென்னை, தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் முல்லா. இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு அதேபகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு முல்லா வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மகேஷ்குமார் என்ற இளைஞர் முல்லா வீட்டிற்கு திருட வந்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த பணத்தை திருடிய பின் செல்லாமல், அறையில் குழந்தைகளோடு தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை பார்த்துள்ளார்.
பின்னர் அவர் அருகே சென்று அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்துள்ளார். அப்போது விழித்துக்கொண்ட அந்த பெண் அலறியுள்ளார். பெண்ணின் சத்தத்தை கேட்டு வந்த முல்லா, மகேஷை பிடிப்பதற்குள் சுவர் மீது ஏறி குதித்து தப்பி விட்டார்.
இந்த நிலையில், மறுநாள் காலை, இந்த சம்பவம் குறித்து முல்லா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மகேஷ்குமாரை தேடி பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பக்கத்து வீட்டில் திருட வந்த போது, பெண்ணுக்கு பாலியல் கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!