Tamilnadu
“தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை” : பக்கத்து வீட்டு இளைஞர் கைது - விசாரணையில் பகீர் தகவல்!
சென்னை, தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் முல்லா. இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு அதேபகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு முல்லா வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மகேஷ்குமார் என்ற இளைஞர் முல்லா வீட்டிற்கு திருட வந்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த பணத்தை திருடிய பின் செல்லாமல், அறையில் குழந்தைகளோடு தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை பார்த்துள்ளார்.
பின்னர் அவர் அருகே சென்று அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்துள்ளார். அப்போது விழித்துக்கொண்ட அந்த பெண் அலறியுள்ளார். பெண்ணின் சத்தத்தை கேட்டு வந்த முல்லா, மகேஷை பிடிப்பதற்குள் சுவர் மீது ஏறி குதித்து தப்பி விட்டார்.
இந்த நிலையில், மறுநாள் காலை, இந்த சம்பவம் குறித்து முல்லா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மகேஷ்குமாரை தேடி பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பக்கத்து வீட்டில் திருட வந்த போது, பெண்ணுக்கு பாலியல் கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!