Tamilnadu
பெட்ரோல், டீசல் உயர்வுக்குக் காரணமே மோடிதானே.. கேள்வி கேட்ட நபரை தாக்கிய பா.ஜ.க-வினர்!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்தவர்கள் மின் கட்டணம் மாற்றியமைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
அப்போது அங்கிருந்து நபர் ஒருவர் பெட்ரோல், டீசல் விலை எல்லாம் உயர்ந்து விட்டது. இதற்குக் காரணமே மோடி அரசுதான். இதைக் கண்டித்து பா.ஜ.கவினர் போராட்டம் நடத்துவீங்களா? என கேள்வி எழுப்பினார்.
இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்த பா.ஜ.கவினர் அந்த நபரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்து போலிஸார் பா.ஜ.க தொண்டர்களிடம் இருந்து அந்த நபரை மீட்டு ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவைத்துள்ளனர்.
மேலும் மின் கட்டணம் மாற்றியமைத்தற்குப் போராட்டம் நடத்தும் பா.ஜ.க, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் போராட்டம் நடத்தவேண்டியதுதானே?. இதை விட்டுவிட்டு கேள்வி கேட்ட நபரைத் தாக்குவது என்ன நியாயம் என அங்கிருந்த பொதுமக்களும் பா.ஜ.கவினருக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
Also Read
-
“திருச்சியில் 10 லட்சம் உடன்பிறப்புகளுடன் ‘மாநில மாநாடு’ நடத்த இருக்கிறோம்!”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!
-
மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழப்பு! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
“அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி எனபது பியூஸ் போன பல்புதான்!” : முரசொலி தலையங்கம்!
-
முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு இல்லை : அதிர்ச்சியளித்த ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
மூத்த தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம் மறைவு தமிழுலகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு: உருக்கமுடன் முதலமைச்சர் இரங்கல்!