Tamilnadu
பெட்ரோல், டீசல் உயர்வுக்குக் காரணமே மோடிதானே.. கேள்வி கேட்ட நபரை தாக்கிய பா.ஜ.க-வினர்!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்தவர்கள் மின் கட்டணம் மாற்றியமைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
அப்போது அங்கிருந்து நபர் ஒருவர் பெட்ரோல், டீசல் விலை எல்லாம் உயர்ந்து விட்டது. இதற்குக் காரணமே மோடி அரசுதான். இதைக் கண்டித்து பா.ஜ.கவினர் போராட்டம் நடத்துவீங்களா? என கேள்வி எழுப்பினார்.
இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்த பா.ஜ.கவினர் அந்த நபரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்து போலிஸார் பா.ஜ.க தொண்டர்களிடம் இருந்து அந்த நபரை மீட்டு ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவைத்துள்ளனர்.
மேலும் மின் கட்டணம் மாற்றியமைத்தற்குப் போராட்டம் நடத்தும் பா.ஜ.க, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் போராட்டம் நடத்தவேண்டியதுதானே?. இதை விட்டுவிட்டு கேள்வி கேட்ட நபரைத் தாக்குவது என்ன நியாயம் என அங்கிருந்த பொதுமக்களும் பா.ஜ.கவினருக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!