Tamilnadu

கோவை ஈஷா மையத்தில் ஆந்திர இளைஞர் தற்கொலை.. போலிஸ் தீவிர விசாரணை!

கோவை ஈஷா மையத்திற்கு யோகா பயிற்சி கற்றுக் கொள்வதற்காக ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளு ரமணா என்பவர் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு இங்கு வந்துள்ளார். இதையடுத்து அங்கு தங்கி கொள்ளு ரமணா பயிற்றி பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து ஈஷா மைய நிர்வாகிகள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பிறகு அங்கு வந்த போலிஸார் கொள்ளு ரமணாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தற்கொலைக்கு முன்பு கொள்ளு ரமணா எழுதிய கடிதத்தையும் போலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சில நாட்களாகவே மன அழுத்தத்தில் கொள்ளு ரமணா இருந்ததாக ஈஷா மையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலிஸார் கொள்ளு ரமணாவின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதிலிருந்து விடுபடுவதற்குத் தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறியக் கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்!

Also Read: அக்காவுடன் ஏற்பட்ட சேலை தகராறு : இரயில் முன் பாய்ந்த தங்கை.. புடவைக்காக பறிபோன உயிர் !- பின்னணி என்ன ?