Tamilnadu
நடித்து கொண்டிருந்த போதே உயிரை விட்ட நாடகக்கலைஞர்.. கிராம மக்கள் முன்னிலையில் நடந்த சோகம்!
ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட குப்பன் துறை என்ற கிராமத்தில் ஆண்டுதோறும் மழை வேண்டி இரண்யா நாடகம் நடைபெறுவது வழக்கம். இந்த நாடகத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜய்யன் என்பவர் முன்னின்று நடத்தி வந்தார்.
இந்நிலையில் வழக்கம்போல் இந்த ஆண்டும் இரண்யா நாடகம் நடைபெற்றது. இந்த நாடகம் 5நாட்கள் தொடர்ந்து நடைபெறும். நேற்று இரவு கடைசி நாளுக்கான நாடகம் நடைபெற்றது.
அப்போது நாடகத்தில் நாரதர் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த ராஜய்யா திடீரென சரிந்து கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது இறப்பிற்கு சக நாடக கலைஞர்களும் கிராம மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நாடகக் கலைஞர் ஒருவர் சரித்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம்!
-
த.வெ.க அரசின் மாற்றம் இதுதானா? : லாக்கப் படுகொலைக்கு பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ கண்டனம்!
-
“சிபிஎஸ்இ-யில் 3-வது மொழி தேர்ச்சி கட்டாயம்.. மொழித் திணிப்பின் உச்சம்” : தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்!
-
ஆதிதிராவிடர் சொல் விவாதம் தேவை ; த.வெ.க அரசு அவசரப்படக்கூடாது : முரசொலியின் ஆலோசனை என்ன?
-
“சபரிவர்மனின் மர*த்துக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!