Tamilnadu
நடித்து கொண்டிருந்த போதே உயிரை விட்ட நாடகக்கலைஞர்.. கிராம மக்கள் முன்னிலையில் நடந்த சோகம்!
ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட குப்பன் துறை என்ற கிராமத்தில் ஆண்டுதோறும் மழை வேண்டி இரண்யா நாடகம் நடைபெறுவது வழக்கம். இந்த நாடகத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜய்யன் என்பவர் முன்னின்று நடத்தி வந்தார்.
இந்நிலையில் வழக்கம்போல் இந்த ஆண்டும் இரண்யா நாடகம் நடைபெற்றது. இந்த நாடகம் 5நாட்கள் தொடர்ந்து நடைபெறும். நேற்று இரவு கடைசி நாளுக்கான நாடகம் நடைபெற்றது.
அப்போது நாடகத்தில் நாரதர் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த ராஜய்யா திடீரென சரிந்து கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது இறப்பிற்கு சக நாடக கலைஞர்களும் கிராம மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நாடகக் கலைஞர் ஒருவர் சரித்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!