Tamilnadu
கோவை பாலம் அமைத்தலில் திட்டமிடல் இல்லை..விபத்தை தடுக்க குழு அமைப்பு! -அமைச்சர் செந்தில் பாலாஜி!
கோவை, திருச்சி சாலையில் ரூ.253 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலம், கடந்த மாதம் திறக்கப்பட்டது. ஆனால், ஒரு மாதத்துக்குள் மூன்று பேர் அந்த பாலத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தனர்.
இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த மேம்பாலத்துக்கு சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேம்பாலம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், "சரியான திட்டமிடல் இல்லாமை, உரிய வழிமுறைகள் இல்லாமல் பாலம் கட்டியுள்ளனர். இதன் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். தொடரும் விபத்துக்களால் வேகத்தடை அமைத்தல், 40 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இது போன்ற தற்காலிக ஏற்பாடுகளை தாண்டி மேம்பாலத்தின் இரு பக்கங்களிலும், தனியார் நிலத்தை கையகப்படுத்தும் பணி நடைபெறும். பாலம் நேராக இல்லாமல் 70 டிகிரிக்கு குறுகலாக திரும்பக்கூடிய அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல்துறை, போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அடங்கிய குழு அமைக்கப்படும்
எதிர்காலத்தில் முழுமையாக விபத்துகளை தவிர்ப்பதற்காகதான் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பக்க சுவர் எழுப்பினாலும், 3 கி.மீ தொலைவு மேம்பாலத்தை 40 கி.மீ வேகத்தில் செல்லுங்கள் என்று வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த முடியாது" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!