Tamilnadu
வன்முறையை கைவிடுங்கள்.. போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த டி.ஜி.பி சைலேந்திரபாபு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி அலுவலகத்தில் தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே மாணவி இறந்தது தொடர்பாக முறையான விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. 2 எஸ்.பி 350 காவலர்கள் அங்கு உள்ளனர். இருந்தபோதிலும் அங்கு இது போன்ற கலவரங்கள் நடைபெற்று உள்ளது.
கூடுதல் டி.ஜி.பி தாமரைக்கண்ணன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலிசார் அங்கு விரைந்து கொண்டிருக்கின்றனர். அங்கு நடைபெற்ற வன்முறை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அங்கு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது ஆதாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். கலவரம் செய்தவர்கள் அங்கிருந்து உடனடியாக செல்ல வேண்டும். இல்லை என்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த கட்ட விசாரணையில் தான் அங்கு என்ன நடைபெற்றது.மற்ற இடங்களில் இருக்கும் பொதுமக்கள் அங்கு செல்ல வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
-
ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
-
பீகார் தேர்தல் - குளறுபடிகளுக்கு இடையே நிறைவடைந்த முதற்கட்ட வாக்குப்பதிவு! : 2ஆம் கட்டத் தேர்தல் எப்போது?
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!