Tamilnadu
வன்முறையை கைவிடுங்கள்.. போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த டி.ஜி.பி சைலேந்திரபாபு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி அலுவலகத்தில் தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே மாணவி இறந்தது தொடர்பாக முறையான விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. 2 எஸ்.பி 350 காவலர்கள் அங்கு உள்ளனர். இருந்தபோதிலும் அங்கு இது போன்ற கலவரங்கள் நடைபெற்று உள்ளது.
கூடுதல் டி.ஜி.பி தாமரைக்கண்ணன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலிசார் அங்கு விரைந்து கொண்டிருக்கின்றனர். அங்கு நடைபெற்ற வன்முறை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அங்கு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது ஆதாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். கலவரம் செய்தவர்கள் அங்கிருந்து உடனடியாக செல்ல வேண்டும். இல்லை என்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த கட்ட விசாரணையில் தான் அங்கு என்ன நடைபெற்றது.மற்ற இடங்களில் இருக்கும் பொதுமக்கள் அங்கு செல்ல வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!