Tamilnadu
அப்பளம் போல் நொறுங்கிய கார்.. உடல் நசுங்கி கணவன் - மனைவி பரிதாப பலி : நெஞ்சை உருக்கும் சோக சம்பவம் !
சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (30). இவர் தனியார் கம்பெனி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நித்திஷா (27). இந்த தம்பதிக்கு ஜெனிஷா ஸ்ரீ ( 9), பிரணவ் ஆதித்யா (8) என சிறுவர்கள் உள்ளனர்.
இந்நிலையில், மனோஜ் தனது குடும்பத்தாருடன் காரில் நெல்லையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து கோவில்பட்டியிலிருந்து விருதுநகர் நோக்கி கார் சென்று கொண்டிருந்தபோது தனியார் பேருந்து மோதியுள்ளது.
இதில் காரின் முன்பகுதி முழுவதுமாக நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் மனோஜ் அவரது மனைவி நித்திஷா ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் சிறுவர்கள் ஜெனிஷா ஸ்ரீ, பிரணவ் ஆதித்யா இருவரும் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
இவர்களை மீட்ட போலிஸார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !