Tamilnadu
முந்தி செல்ல முயன்ற சொகுசு பேருந்து.. லாரி மீது மோதியதில் 2 பேர் பலி.. அதிகாலையில் நடந்த கோர விபத்து !
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்து பூ மாம்பாக்கம் என்ற பகுதி உள்ளது. இதன் அருகே உள்ள சென்னை - திருச்சி 4 வழி சாலையில், இன்று அதிகாலை லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த லாரிக்கு பின்னால், சென்னையில் இருந்து தேனிக்கு புறப்பட்ட தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
இந்த நிலையில், லாரியை முந்தி செல்வதற்காக, அந்த தனியார் பேருந்து ஓட்டுநர் முயன்றுள்ளார். அப்போது லாரியின் இடது புறத்தில் தனியார் பேருந்து மோத, விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த இந்த தனியார் பேருந்து, விபத்துக்குள்ளான போது, அதிலிருந்த ஓட்டுநர் சிவா என்பவரும், மாற்று ஓட்டுநரான புலிக்குட்டி என்பவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு எதுவும் ஆகவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து காலையில் நடைபெற்ற இந்த கோர சம்பவம் குறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை காவல்துறையினர் விரைந்து வந்து இறந்த உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!