Tamilnadu
திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. காலையில் நடைபயிற்சி சென்றவர்கள் அதிர்ச்சி!
சென்னை, திருவல்லிக்கேணி கஜபதி தெருவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ கார் ஒன்று திடீரென இன்று அதிகாலை தீடிரென தீ பிடித்து எரிந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயயை அனைத்தனர்.
மேலும் எரிந்த இந்த காருக்கு யாரும் உரிமை கோரவில்லை. தீயில் முழுமையாக கார் எரிந்துள்ளதால் இந்த கார் யாரடையது என்பது அடையாளம் காண்பதில் போலிஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த மெக்கானிக் கடை அருகே கார் தீ பிடித்து எரிந்ததால் பழதுபார்ப்பதற்காக இந்த கார் வந்திருக்குமோ என போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது விஷமிகள் யாராவது தீ வைத்து விட்டு சென்றார்களா? என்கிற அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடனடியாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கப்பட்டதால் அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் தீ விபத்தில் இருந்து தப்பின என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சி.பி.ஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்! : “முறைகேடு நடைபெறவில்லை” என உத்தரவு!
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணாக்கர் சேர்க்கை : அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு!
-
ஜூலை 15 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் - முதற்கட்ட பணியில் 1 லட்சம் தன்னார்வலர்கள்!
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!