Tamilnadu
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண் சிங்கம்.. சோகத்தில் மூழ்கிய வண்டலூர் ஊழியர்கள் !
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சென்னையிலேயே சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கும் இந்த பூங்காவில், சிங்கம், புலி, வரிக்குதிரை, பறவைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் இருக்கிறது.
இந்த பூங்காவில் இருக்கும் விலங்குகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அதற்கு தேவையான மருத்துவ உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சில விலங்குகள் நோய், வயது மூப்பு என்று எதிர்பாராத விதமாக உயிரிழந்து வருகின்றன.
அந்த வரிசையில் கடந்த 6 மாதங்களில் மட்டுமே 6க்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழந்துள்ளன. மேலும் கடந்த மாதம் 2 சிங்கங்கள் இருந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், தற்போது நோய்வாய்ப்பட்டிருந்த புவனா (25) என்ற ஒரு சிங்கம் உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "புவனா என்கின்ற விஜி என்ற பெண் சிங்கம் மலக்குடல் நீழ்ச்சி தொங்கல் பாதிப்பு ஏற்பட்டு, கடந்த ஒரு மாத காலமாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்தது. அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது.
எனவே தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழுவால் அந்த விலங்குக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், செய்யப்பட்ட அறுவை சிகிச்சை சிங்கத்தின் வயது முதிர்வு காரணமாக பலனின்றி உயிரிழந்தது" என குறிப்பிட்டிருந்தது. தொடர்ந்து விலங்குகள் உயிரிழந்து வருவது பூங்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“முதலமைச்சர் விஜயிடம் நான் கேட்பது இதுதான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
-
“ஒன்றிய அரசின் அலட்சியம்.. கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை.. தொடரும் நீட் தேர்வு மரணம்”
-
“ஆழம் தெரியாமல் காலை விட்ட தவெக, முடியாததால் வெள்ளை அறிக்கை தருகிறதா?” : தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி!
-
“மரண ஓலம் விஜய் காதில் விழாவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!
-
FIFA உலகக் கோப்பை: மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் அதிரடி; வெற்றியுடன் தொடங்கிய ஜாம்பவான்கள்!